என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை
- சிவக்குமார் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் கொங்கு நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் அந்த பகுதியில் வெல்டிங் ஓர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு சுலோச்சனா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.இந்தநிலையில் சிவக்குமார் தொழில் தேவைக்காகவும், மகனை படிக்க வைப்பதற்காகவும் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிவக்குமார் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






