search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு
    X

     பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்ட காட்சி.

    வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு

    • பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வடக்கு மாவட்ட பா. ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், முத்து பலவேசம், வேல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பட்டியல்அணி மாநில துணைத்தலைவர் பொன்ராஜ், தச்சை மண்டல தலைவர் பிரேம்குமார், ஊடகப்பிரிவு முத்து, வர்த்தக அணி குரு மகாராஜன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    Next Story
    ×