search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பெண்கள் திடீர் சாவு
    X

    2 பெண்கள் திடீர் சாவு

    • 2 பெண்கள் திடீர் மரணம் அடைந்தனர்.
    • அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பாரைபட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அல்போன்சா (வயது 42). இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து வந்து இங்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் அல்ேபான்சாவுக்கு உடல்நிலை சரியில்லாததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த அவர் திடீரென இறந்தார். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (38). இவர் குடும்பத்துடன் 2 மாதங்களுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தார். சம்பவத்தன்று முத்துலட்சுமி திடீரென இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×