என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி-வாலிபர் தற்கொலை
    X

    தொழிலாளி-வாலிபர் தற்கொலை

    • தொழிலாளி-வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி(வயது50). பெயிண்டரான இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதனால் விரக்தியடைந்த முனியாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள எஸ்.தோப்பூரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சின்னராஜ்(வயது28). இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் சின்னராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×