என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி-தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
    X

    தொழிலாளி-தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    • தொழிலாளி-தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • விரும்பிய படிப்பு மற்றும் வேலை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டையதேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டிமுருகன்(30). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். சம்பவத்தன்று பாண்டிமுருகன், மனை வியை குடும்பம் நடத்த அழைத்தார். அவரும் கண வருடன் செல்ல சம்மதித்தார்.

    அப்போது திடீரென பாண்டிமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, மனைவி தன்னுடன் வரமாட்டார் என கருதி முன்கூட்டியே விஷம் குடித்ததாக கூறியுள் ளார்.

    உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிமுருகன் இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தனியார் நிறுவன ஊழியர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டி பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பாண்டியராஜ்(வயது21). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்திருந்த பாண்டி யராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், பாண்டியராஜூக்கு விரும்பிய படிப்பு மற்றும் வேலை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

    Next Story
    ×