என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தமிழன்னை நண்பர்கள் குழு, தமிழ் சங்கம், அன்னை தெரசா நற்பணி இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ராஜபாளையம், செப்.19-
ராஜபாளையம் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குழுவின் திட்டம், ெரயில்வே மேம்பால பணிகள் மெத்தன போக்கில் நடைபெற்று வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தொடக்க உரையாற்றினார்.
பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் நல்லமுத்து, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், முகநூல் நண்பர்கள் குழு செல்வகுமார், அறம் அறக்கட்டளை மணிகண்டன், சி.ஐ.டி.யு. டாக்சி-ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் கண்ணன், நேதாஜி ரத்ததான கழகம் முருகானந்தம், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் கண்ணன், நாம் தமிழர் கட்சி ராமசுப்பிரமணியன், வணிகர் சங்க பேரமைப்பு லட்சுமணப் பெருமாள், பார்வர்டு பிளாக் மாநில நிர்வாகி சுப்புராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர். தமிழன்னை நண்பர்கள் குழு, தமிழ் சங்கம், அன்னை தெரசா நற்பணி இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்