search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தீயில் கருகி பலி
    X

    இளம்பெண் தீயில் கருகி பலி

    • இளம்பெண் தீயில் கருகி பலியானார்.
    • வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள காரியாபட்டி ரோட்டைச் சேர்ந்த முனியாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மணியமுது (வயது 23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. முனியாண்டி அதே பகுதியில் புதிதாக வீடுகட்டினார்.

    இந்தபணிகள் முடிந்த நிலையில் கடந்த 20-ந் தேதி கிரகப்பிரவேசம் நடந்தது. இந்த நிலையில் முனியாண்டி, மனைவியின் தந்தை சமயனிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதில் உடல் கருகி காயமடைந்த உங்கள் மகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சமயன் உடனே பதறியடித்துக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மணியமுதுவின் நிலையை பார்த்து கண் கலங்கனார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணியமுது பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமயன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×