என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
    X

    கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

    • கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது தம்பிபட்டி தனியார் மில் அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இருவரையும் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது கூமாபட்டி அமச்சியார்புரம் காலனியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (25), அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (18) என்பது தெரியவந்தது. 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×