search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மணல் குவியல்களை அகற்ற வேண்டும்
    X

    போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மணல் குவியல்களை அகற்ற வேண்டும்

    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மணல் குவியல்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலை ஓரம் உள்ள மணல்களை அகற்றாமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பலியாக கூடிய நிலை ஏற்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் மணல் திட்டுகள் நிறைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் மணல் திட்டில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாக கூடிய நிலைமை ஏற்படுகிறது.

    இதனை தடுக்கும் விதமாக உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் நகரின் ஆரம்பப்பகுதியான ராமகிருஷ்ணாபுரம் முதல் நகர் எல்லை முடியும் பகுதி மடவார் வளாகம் வரை உள்ள 2 புறங்களிலும் சாலை ஓரத்தில் உள்ள மணல் குவியல்களை அகற்றி வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணல் குவியல்களால் பல நேரங்களில் அதிவேகமாக எதிரே வரும் வாகனத்தை கவனித்து ரோட்டை கடக்க வாகன ஓட்டிகள் சாலையில் ஓரப்பகுதிக்கு செல்லும் போது சாலையில் மணலால் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர்.

    இதுகுறித்து பல்வேறு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரம் உள்ள மணல்களை அகற்றாமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பலியாக கூடிய நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் வாகன விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×