search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்
    X

    விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது எடுத்த படம்.

    ரூ.10 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

    • திருச்சுழி தொகுதியில் ரூ. 10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • காரியாபட்டி ஒன்றியத்திலும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் குச்சம் பட்டி புதூரில் நெடுஞ் சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 18 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் திருச்சுழி - காரியாபட்டி சாலையில் இருந்து குச்சம்பட்டி புதூர் குண்டாற்றில் 10 தூண்களுடன் கூடிய சுமார் 9 கண்கள் கொண்ட புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அதே போன்று திருச்சுழி ஒன்றியம் வடக்கு நத்தம் சாலையில் ரூ.2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.மேலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பையூர் கிராமத்தில் சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப் பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அரும்பணி யையும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அடிக் கல் நாட்டி தொடங்கி வைத் தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை யும், மக்களை தேடி மருத்து வம் திட்டத்தின் கீழ் பயன் பெறும் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.

    காரியாபட்டி ஒன்றியத் தில் சுமார் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணி களையும் தொடங்கி வைத் தார். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமை தாங்கினார். நெடுஞ்சா லைத்துறை கோட்டப்பொ றியாளர் முரளிதர், அருப்புக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் கணேசன், நெடுஞ்சா லைத்துறை ஊரக சாலை உதவி பொறியாளர் வெங்கடேஷ், திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுத் தம்பி, நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்போஸ்த் தேவர், தங்க தமிழ்வாணன், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×