search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவன டிரைவர் மாயம்
    X

    தனியார் நிறுவன டிரைவர் மாயம்

    • விருதுநகர் அருகே தனியார் நிறுவன டிரைவர் மாயமானார்.
    • வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி தாயில்பட்டி அருகே உள்ள தச்சையாபுரத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (வயது 27). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து காளிராஜின் மனைவி மாரீஸ்வரி வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×