search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்யா வித்யாலயா பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
    X

    சத்யா வித்யாலயா பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

    • சத்யா வித்யாலயா பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பிளாஸ்டிக் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தி மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர். பள்ளிக்குழு தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். முதல்வர் செந்தில்குமார், ஆலோசகர் பாரதி, நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை டைகர் சம்சுதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ஆப் சத்திரப்பட்டி பேண்டேஜ் சிட்டி தலைவர் பழனிசாமி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், ராஜா, கீழகுலராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×