search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
    X

    போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    • போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட போலீசார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை மைதானங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பலன் தரும் 600 மரக்கன்றுகள் உள்பட 2400 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×