என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டி-இளம்பெண் தற்கொலை
- மூதாட்டி-இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்தவர் கற்பகம்(வயது36). இவர் 15 வருடமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார். மூத்த மகன் திருமணம் செய்து கொண்டு நெல்லையில் வசிக்கிறார். தனிமையில் இருந்த அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் சாணி பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மகன் ராஜா ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தேவர் தெருவை சேர்ந்தவர் வீராயி(69). இவர் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சாணி பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஜெயபாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






