search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரியில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    கல்குவாரியில் எம்.எல்.ஏ. ஆய்வு

    • கல்குவாரியில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் மதுரை-கொல்லம் 4 வழிச்சாலை பணிக்காக கல் குவாரி அமைக்கப்பட்டது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்குவாரியில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, 4 வழிச்சாலை பணிக்காக அமைக்கப்பட்ட கல் குவாரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கல்குவாரியில் பணிகளை செய்ய அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×