search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
    X

    மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை

    • மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக்குளம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 18). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் கார் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜ பாளையம் வந்த ஈஸ்வரன் திடீரென விஷம் குடித்து விட்டு பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடன் வேலை பார்க்கும் சார்லஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து ஈஸ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஈஸ்வரனின் பெற்றோர் மகனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரனின் தாய் தங்கம்மாள் புகார் ெசய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×