search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.187.94லட்சம் மதிப்பீட்டில்  நூலகம்-அறிவு சார் மையம்
    X

    ரூ.187.94லட்சம் மதிப்பீட்டில் நூலகம்-அறிவு சார் மையம்

    • ரூ.187.94லட்சம் மதிப்பீட்டில் நூலகம்-அறிவு சார் மையம் அமைய உள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக் குமார், மேலாளர் சங்கர் கணேஷ், நகர் நல அலுவலர் ராஜநந்தினி, முன்னாள் நகர் மன்ற தலைவரும் கவுன்சிலருமான சிவப்பிரகாசம் மற்றும் 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.187.94 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் காலனி 1-வது தெருவில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் கட்டப்பட உள்ளது

    சொக்கலிங்கபுரம் நகராட்சி மயானம் புதுப்பிக்கப்பட உள்ளது. புளியம்பட்டி மேற்கு பகுதியில் புதிய எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது. சின்ன புளியம்பட்டி காந்தி மைதானத்தில் மினி மார்க்கெட் ஏற்படுத்தவும், நகரில் 8 கிலோ மீட்டருக்கு மண் சாலைகளை மாற்றி தார்சாலைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதார கேடாக இருந்தால் உடனுக்குடன் தூய்மை செய்ய வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி முதல் ''மொபைல் கிளினிக் டீம்'' அமைக்கப்பட உள்ளது. 36 வார்டுகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.26-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முருகானந்தம் பேசுகையில், எனது வார்டுகளில் 10 தெருக்கள் உள்ளன. 10 தெருக்களிலும் இருந்து கழிவு நீர் சரியாக வெளியே செல்வதில்லை. இதனால் தெருப்பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றார்.

    இதற்கு தலைவர் சுந்தர லட்சுமி பதிலளிக்கையில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் 1-வது வார்டில் கவுன்சிலர் தனலட்சுமி, 7 வது வார்டில் கவுன்சிலர் கோகுல் ஆகியோர் தங்கள் வார்டுகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தியது

    Next Story
    ×