என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளி தற்கொலை
    X

    போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளி தற்கொலை

    • போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் புல்லலக் கோட்டை ரோட்டை சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகன் தங்க முனீசுவரன்(20). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான புகாரின் போலீசார் தங்க முனீசுவரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த தங்க முனீசுவரன் வேலைக்கு செல்லாமல் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவ த்தன்று அவரது தாயார் சதுரகிரி கோவிலுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாழ்க்கையில் வெறுப்ப டைந்த தங்க முனீசுவரன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவிலுக்கு சென்றுவிட்டு மாரிக்கனி வீட்டுக்கு வந்தபோது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×