search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் தொழில் பயற்சி பெற்றால் குடும்ப பொருளாதாரம் உயரும்
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.

    பெண்கள் தொழில் பயற்சி பெற்றால் குடும்ப பொருளாதாரம் உயரும்

    • பெண்கள் தொழில் பயற்சி பெற்றால் குடும்ப பொருளாதாரம் உயரும் என விருதுநகர் கலெக்டர் பேசினார்.
    • வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் சூலக்கரை தொழிற்பயிற்சி நிலை யத்தில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 4.0 தர தொழிற்நுட்ப மையத்தின் மூலம் செயல்படும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய 3 அரசினர் தொழிற் பயிற்சி நிலை யங்களிலும் 2023-ம் ஆண்டிற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கை நடை பெற்று வருகிறது.

    இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை அதிக ரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலை யத்தில் நமது சகோதரிகள்" விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது.

    இந்நிகழ்ச்சியில் நவீன தொழில் பிரிவுகளில் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழில் 4.0 தர தொழில்நுட்ப மையங்களில் ஆய்வகங்கள், பணி மனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவி கள், அவர்களின் பெற்றோர் கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    தரமான கல்வியின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொழிற் பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பிற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பு களை காட்டிலும், தொழிற் பயிற்சி மையங்கள் தொழில் பயின்றோர்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.

    பெண்கள் தொழிற் பயிற்சி பயில்வதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று, தங்களுடைய பொருளா தாரத்தை உயர்த்துவதன் மூலம், தங்கள் குடும்ப பொருளாதாரமும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×