search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிமா பள்ளி மாணவர்களுக்கு தங்க பதக்கம்
    X

    அரிமா பள்ளி மாணவர்களுக்கு தங்க பதக்கம்

    • கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
    • தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் முருகன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும் வாழ்த்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

    இதில் அரிமா பள்ளி மாணவர்கள் கிஷோர் குமார், முகுந்தன், உதய் கமலேஷ், சிவ அக்‌சய குமார், அரவிந்த், அருண், குமரன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து குழுவில் சேர்ந்து விளையாட பயிற்சிக்கு தகுதிபெற்றுள்ளனர். மாணவிகள் சோஷ்லின், காவியா ஆகியோர் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர்.

    தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் முருகன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும் வாழ்த்தினர்.

    Next Story
    ×