search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நில விவரங்களை விவசாயிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்
    X

    நில விவரங்களை விவசாயிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

    • விருதுநகரில் நில விவரங்களை விவசாயிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விவசாயிகள் பயன்பெ றும் வகையில் தமிழக அரசு மூலம் 1.4.2023 முதல் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான வேளாண் அடுக்ககம் (AGRI STACK) மூலம் நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை வாரி யாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம்-இனங்களை குறித்து அறிந்து கொள்ள இயலும்.

    இதில் முக்கியமாக நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம் அறிய உருவாக்க பட்டுள்ள GRAINS வலைதளத்தில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை, வேளாண் மைத்துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சித்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட்டு ள்ளதால் அரசு திட்டங்க ளின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்ற டைவதை உறுதிப்படுத்த முடியும்.

    மேலும் இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    விவசாயிகள் தாங்களே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெ றலாம். விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    திட்டங்க ளின் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் GRAINS வலைதளத்தில் தங்களது ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    AGRISTACK/GRAINS Project-தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் விவசாயிகள் தரவு தளத்திற்கான சேகரிப்பு தொடர்பாக விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர்கள், மின்னணு மாவட்ட மேலாளர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோருக்கு வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளம் பற்றி மாவட்ட அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு, மாவட்ட அளவிலான பயிற்சி பெற்ற அலுவலர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவ லர்கள், வருவாய் ஆய்வா ளர்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை சார்ந்த களப்பணி யாளர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு பதிவேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை தங்களது கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் மூலம் வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×