search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
    X

    தெருமுனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
    • தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே நரிக்குடி ஒன்றியம் இருஞ்சிறை கிராமத்தில் தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ண குமார் தலைமை வகித்தார்.

    நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பா ளர்கள் சிதம்பர பாரதி,சேகர் மற்றும் ஜெகன் ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கி ணைக்க நரிக்குடி வடக்கு ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளரும்,தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான தங்கம் தென்ன ரசுவின் அறிவுறுத்தலின் பேரில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நெல்லை முத்தையா அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த ஏற்பாடுகளை இருஞ்சிறை தி.மு.க. கிளை செயலாளர் கர்ணன் வீரபாண்டி மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் திறம்பட செய்திருந்தனர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் சேர்மன் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன், பார்வதிநாதன், சிக்கந்தர், கண்ணன், பிச்சைமணி தங்கப் பாண்டியன், வீரசோழன் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் பல்வேறு பிரிவு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×