search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கிய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கிய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜ் மோகன், நகரத் தலைவர் பட்சிராஜா, வன்னியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ரெங்கசாமி பேசுகையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை தற்காலிகமாக நிறைவேற்றமால், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், உடனடியாக, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, வயநாடு பாராளுமன்ற தொகுதி காலியாக உள்ளது என பாராளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது ஜனநாயக படுகொலையாகும்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சக்திமோகன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் முருகேசன், சுந்தரம், ஜெயக்குமார், ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ், வட்டாரத் தலைவர்கள் பால குருநாதன், முருகராஜ், லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×