search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள், பெண்களுக்கான  விழிப்புணர்வு
    X

    குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு

    • குழந்தைகள், பெண்களுக்கான பிரச்சினை குறித்த விழிப்புணர்வு நடந்தது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண் கள் குழந்தைகள் காண வில்லை, போக் சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரு கிறது.

    இந்த சூழ்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரிலும் திருச் சுழி காவல் துணை கண் காணிப்பாளர் அறிவுரை யின் படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீர்மானிக்கப்பட்டு அ.முக் குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை, நேர்த்தியாயிருப்பு இடையப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியில் இருந்த கிராம மக்களிடம் அ.முக்குளம் காவல்நிலைய சார்பு ஆய் வாளர் அசோக்குமார் நேரில் சென்று பொது மக்கள் மற்றும் காவல்துறை யினர் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும், பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்தும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் குழந்தைகளி டம் பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதுவாயி னும் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரி விக்கலாம் எனவும், வேலைக்கு சென்று வரும் பெண்கள் சந்திக்கும் பிரச் சினைகளை பெண்கள் பாதுகாப்பு உதவி எண்ணான 181 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி னார்.

    மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தா லோ, சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற் பனை செய்தாலோ உடனடி யாக இதுகுறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேலும் இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியின் போது சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×