search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவாகரத்து கேட்டு மனைவியை மிரட்டிய கணவர்-கள்ளக்காதலி
    X

    விவாகரத்து கேட்டு மனைவியை மிரட்டிய கணவர்-கள்ளக்காதலி

    • விவாகரத்து கேட்டு மனைவியை கணவர், கள்ளக்காதலியை மிரட்டினர்.
    • அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பிரிஞ்சா குளம் பகுதியை சேர்ந்தவர் வீரபிரபு. இவரது மனைவி லதா (23). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஒரு இளம் பெண்ணை வீரபிரபு வீட்டிற்கு அழைத்து வந்தார். லதா அது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு அந்த பெண் தொட்டியங்குளத்தை சேர்ந்த பூமி(23) என்றும் அந்த பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அதனால் லதா தனக்கு விவாகரத்து தர வேண்டும் என்றும் கூறி உள்ளார். ஆனால் லதா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது லதா விவகாரத்து தராவிட்டால், அவரையும், குழந்தையையும் கொன்று விடுவதாக கணவரும், பூமியும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இதை யடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லதா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×