என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சதுரகிரி செல்ல அனுமதிக்கக்கோரி வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி ேபாராட்டம்
- சதுரகிரி செல்ல அனுமதிக்கக்கோரி வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த ஆண்டு இரவில் தங்கி வழிபாடு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி கிருஷ்ணன் கோவில் அருகே சுந்தரபாண்டியம் அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா கொண்டா டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
கொரோனா ஊரடங்கு தளர்வு காலத்திலும் பக்தர்கள் இரவில் கோயிலில் தங்கி வழிபாடு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. அதிலும் இந்த ஆண்டு இரவில் தங்கி வழிபாடு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது. நவராத்திரி விழாவில் கோயிலில் இரவில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறைக்கும் இந்து சமய அறநிலையத்து றைக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நவராத்திரி விழா குறித்த அமைதி கூட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் முத்துமாரி வத்திராயிருப்பு வனச்சரகர் பிரபாகரன், சாப்டூர் வனச்சரகர் செல்லமணி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் ஏழூர் சாலியர் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நவராத்திரி திருவிழாவில் கடைசி 3 நாட்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான பக்தர்களை மலைக் கோயிலில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இரவில் தங்கி வழிபாடு நடத்துவதற்கு வனத்துறை அனுமதி மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து சுந்தர பாண்டியம் ஏழூர் சாலியர் சமுதாய பொது மக்கள் வனத்துறையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்