என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து
    X

    வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து

    • வங்கி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அசோக் (வயது 21). கோவையில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள குக்குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படு கிறது.

    இதை அறிந்த உறவி னர்கள், அந்த பெண் தங்கை முறை என்று அசோக்கிடம் தெரியப் படுத்தினர். இதையடுத்து அந்த பெண்ணுடன் பேசி பழகுவதை அசோக் நிறுத்தி விட்டார்.

    இந்த நிலையில் அசோக்கின் சகோதரிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அசோக் ஊருக்கு வந்தி ருந்தார். அப்போது ஊர் திருவிழாவும் நடந்து கொண்டிருந்தது.

    பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அசோக் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இளம்பெண்ணின் உறவினர் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அவர் அசோக்கை வழி மறித்து இளம்பெ ண்ணுடன் பேசி பழகுவதை நிறுத்தி யதை கண்டித்து ள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அசோக்கை கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள் திரண்டதால் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சதீஷ்குமார் தப்பி சென்றார். இதில் காயம் அடைந்த அசோக் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கொடுத்தபுகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.

    Next Story
    ×