search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம்
    X

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம்

    • ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து அம்மனை தரிசிப்பார்கள். மேலும் பக்தர்கள் மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு இன்று மாலை இருக்கன்குடி மேலமடை இருக்கன்குடி கீழத்தெரு பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலை கொடி இதில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி,

    கே. மேட்டுப்பட்டி, என். மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

    ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாவில் நத்தத்துப்பட்டி கிராம மக்கள் அம்மனை ரிஷப வாகனத்தில் பவனி வரச் செய்வார்கள். இதில் கலிங்ககல் மேட்டு ப்பட்டி,நெ.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி பொதுமக்கள் செண்டா, விருது, குடை, மேளம் சேவித்து அம்மனை அழைத்து வந்து சிறப்பு செய்வார்கள்.இதில் அப்பனேரி கிராம பொதுமக்கள் நகரா ஒலி எழுப்பி உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன்,பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×