என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
- ராஜபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம அருகே உள்ள சட்டிக்கிணறு பகுதிைய சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 38). இவர் ெசாந்தமாக ஆட்ேடா வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது ஆக்டிங் கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சத்துணவு கூடத்தில் பணியாற்றும் 35 வயதுடைய பெண் பொறுப்பாளருக்கும், விஜயராகவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது தொடர்பை நீடித்து வந்துள்ளனர்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம், அந்த பெண்ணின் கணவர் ராஜசேகருக்கு தெரிய வந்தது. விஜயராக வனுடனான கள்ளத்தொ டர்பை கைவிடுமாறு மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்று சட்டி கிணறு பகுதியில் விஜய ராகவன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் உள்பட 3 பேர் தகராறு செய்து விஜயராகவனை கல்லால் சரமாரியாக தாக்கினர்.
இதில் அவரது மண்டை உடைந்தது. அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஜயராகவன் புகாரின் கொடுத்தார். அதன்பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்