search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்கள்-முதியவர் தற்கொலை
    X

    வாலிபர்கள்-முதியவர் தற்கொலை

    • வாலிபர்கள்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கலைஞர் நகரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது35). இவரது மனைவி சங்கீதா. லட்சுமணன் வீட்டின் அருகே நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது நண்பர்கள் தம்பிகுமார், முத்து ஆகியோருடன் சேர்ந்து அவரை வழி மறித்துள்ளார். லட்சுமணன் அவர்களிடம் ஏன் வழிமறிக்கிறீர்கள்? என கேட்டபோது தனது சகோதரியுடன் பேச கூடாது என கூறி ஆனந்த், லட்சுமணனை கண்டித் துள்ளார்.

    அதற்கு தான் பேசவில்லை என கூறி லட்சுமணன் மறுத்துள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த ஆனந்த் மற்றும் நண்பர்கள் லட்சு மணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லட்சுமணன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து லட்சும ணனின் தந்தை விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி தனியார் கல்லூரி பகுதியை சேர்ந்தவர் கனிபாண்டி(50), ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கனிபாண்டியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர லிங்கம்(78). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×