search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும்: கே.டி.ராஜேந்திரபாலாஜி
    X

    மதுரை மாநாடு குறித்து சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய காட்சி.

    அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

    • அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    சிவகாசி

    அ.தி.மு.க. வீர வரலாற் றின் பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற் பது குறித்து சிவகாசி சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசியதா–வது:-

    மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் பேச்சை கேட்க நாம் அனைவரும் அணி திரண்டு செல்ல வேண்டும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட் டிற்கு திருப்பு முனையாக அமையும். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    நம்முடைய இயக்கத்தினு–டைய வளர்ச்சியை பார்த்து இன்றைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அண்ணா திராவிட முன் னேற்ற கழகம் கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். ராணுவ கட்டுப்பாடோடு இயங்கும் ஒரு இயக்கம். எடப்பாடியார் தலைமையிலே 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களை உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் இன் றைக்கு வளந்திருக்கிறது. டெல்லியில் இருக்கின்ற அரசியல் தலைவர்களே வியக்கின்ற அளவில் நம்முடைய இயக் கத்தை எடப்பாடியார் மூன்றாவது அத்தியாயத் திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

    வரும் காலம் நமது காலம் என்பதை நிரூபிக்கின்ற வகையில், இந்த மாநாடு சிறக்க இருக்கின்றது. நாம் அத்தனை பேரும் வந்திருக் கின்ற ஒன்றிய, நகர, செயலாளர்கள் கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் பகுதி செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் அழைத்துச் செல் கின்ற கழக நிர்வாகிகளை பொதுமக்களை அந்தந்த வண்டிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமித்து பத்திரமாக பாதுகாப்பாக அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

    மாநாட்டிற்கு காலை யிலே 10 மணிக்கு கிளம்பிட வேண்டும். 10 மணிக்கு கிளம்பினால்தான் அங்கு சிரமமின்றி செல்லலாம். கட்சி பொறுப்பாளர்களை, கட்சித் தொண்டர்களை, கிராமத்து இளைஞர்களை, பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பி அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் உருவாகக்கூடாது என்பதை பற்றி தான் அடிக் கடி மாவட்டச் செயலாளர் கூட்டங்களிலே நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சொல்லி வருகிறார்.

    அவருடைய அந்த வாக்கை வேத வாக்காக நினைத்து நாம் அனைவரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். விருது–நகர் மாவட்டத்தில் இருந்து பிரச்சினை இல்லாமல் வந்தார்கள், மாநாட்டில் கலந்து கொண்டார்கள், பொதுச்செயலாளர் எடப் பாடியார் பேச்சை கேட்டார்கள், ஊர்களுக்கு அமைதி–யாக திரும்பி சென்றார்கள் என்ற நிலைதான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர் மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரம–ணியன், மாவட்ட எம்.ஜி.–ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலா–ளர் முத்துப்பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை–ஞரணி செயலாளர் பிலிப் வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய ஆனந்த்,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாநகர பகுதி கழக செயலா ளர் கிருஷ்ண–மூர்த்தி, சரவ ணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜ அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கி யம், லட்சுமி நாராணயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட மீணவ ரணி செயலாளர் ரெங்கபா ளையம் காசிராஜன், மாநகர கவுன்சிலர் கரைமுருகன்,

    கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் விஸ்வ நத்தம் மணிகண்டன், ஒன்றிய இணை செயலாளர் இளநீர் செல்வம், பள்ள பட்டி ரமேஷ், வழக்கறிஞர் மாரீஸ்குமார், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத் தம்பி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன்,

    ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிக்குமார், முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் காமாட்சி, திருத் தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், தொகுதி கணேசன், ஒன்றிய இளைஞரணி சங்கர், மாந கர இளைஞரணி கார்த்திக், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    Next Story
    ×