என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்
- சிவகாசி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் தெரிவித்தார்.
- அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரம் சாமி நத்தம் காலனியை சேர்ந்த வர் பூமிநாதன் என்ற புவனே சுவரன். இவரது மனைவி சந்தனமாரி (வயது 20). இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான்.
கடந்த சில மாதங்களாக பூமிநாதன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனமாரியின் தாய் முத்துலட்சுமி மகள், பேரனை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டின் கதவு வெளிபுறமாக பூட்டப்பட்டு இருந்தது. செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. சிலமணி நேரம் கழித்து பூமிநாதன் அங்கு வந்து கதவை திறந்தார். அப்போது முத்துலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஒரு அறையில் சந்த னமாரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சந்தனமாரி ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர் பாக மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்ப தாக முத்துலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்