என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்
- நரிக்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்.
- இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
திருச்சுழி
நரிக்குடி அருகே உள்ள உவர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கிளி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை, ரூ. 21 ஆயிரம் கொள்ளை போனது. மேலும் நரிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முடுக்கன்குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் முடுக்கன்குளத்தை சேர்ந்த திருமேனி மகன் பிரவீண்குமார் (18) எனவும், இவர் உவர்க்குளம் வீட்டில் கொள்ளையடித்தது மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story






