என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
- 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் சம்பவத்தன்று தனது 4 வயது மகளை வீட்டில் விட்டு, விட்டு பின்புறம் துணிகளை துவைக்க சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர் வீட்டுக்குள் நுழைந்து அங்கு விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்த அவரது தாயார் அய்யனாரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனர்.
Next Story






