என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 5 பேர் தற்கொலை
    X

    பெண் உள்பட 5 பேர் தற்கொலை

    • விருதுநகர் மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அப்பநாயக்கன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் சங்கிலி(35). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்ற சங்கிலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரத்தை சேர்ந்த முருகன் (65). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் ஸ்ரீதேவி கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப் -இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (25). இவருக்கு பொன்னமராவதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் கயல்விழி என்ற மகள் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு பொன்னமராவதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அவரது சகோதரி கோயம்புத்தூரை சேர்ந்த சங்கீதா ராஜ பாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்டெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகாசி தட்டாவூரணி யை சேர்ந்தவர் பாண்டிய ராஜ். இவரது மனைவி சங்கரேஸ்வரி கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சாத்தூர் சிறுகுளத்தை சேர்ந்தவர் சுப்பாராஜ் (56). நோய் கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அப்பநாயக்கன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×