search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 4 மாயம்
    X

    நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 4 மாயம்

    • நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 4 மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயதுடைய மாணவி நேற்று பிற்பகலில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவியின் தோழிகள் செல்போனில் தொடர்பு கொண்டபோது தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுல்தான் அலாவுதீன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்

    சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் ஜக்கம்மாள்புரம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 22 வயது மகள் சம்பவத்தன்று மாயமானார்.

    இவர் ராயகிரி ஆவுடையா புரத்தை சேர்ந்த குமார் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மகள் மாயமானது குறித்து கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீண்டும் மாயம்

    சிவகாசி டி.கான்சா புரத்தை சேர்ந்தவர் மாணவி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு செல்போன் மூலம் தேனி சின்னமனூரை சேர்ந்த பிரதீப் என்பவர் பழக்க மானார்.

    நாளடைவில் இவர்க ளுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி சம்பவத்தன்று மாயானார். உடனே அவரது தந்தை தேனிக்கு சென்று போலீஸ் உதவியுடன் தனது மகளை மீட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த மாணவி மீண்டும் மாயமானார். இதுகுறித்து மாரனேரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுடன் இளம்பெண்

    ராஜபாளையம் தொம்ப குளத்தை சேர்ந்தவர் பெரு மாள். இவரது மகள் நிகிதா தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தனது மகனுடன் நிகிதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கீழராஜகுலராமன் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×