search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்
    X

    இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்

    • இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 30). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வம் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் பார்வதி கொடுத்த புகாரின்படி கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அக்சயா (வயது 22). இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி யதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்த அக்சயா சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பெற்றோரை தொடர்பு கொண்ட அக்சயா தான் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தேட வேண்டாம் எனவும் தெரி வித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் புளியங்குள த்தை சேர்ந்தவர் கோபால் சாமி (65). சம்பவத்தன்று வெளியூர் செல்வதாக கூறி விட்டு சென்ற இவர் அதன்பின் ஊர் திரும்ப வில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×