என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலதிபர்- டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தொழிலதிபர்- டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

    • தொழிலதிபர்- டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் முத்துராமலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட்லூர்து சந்திரன். இவர் இ-மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்தி வந்தார். தொழிலில் சுமார் ரூ.1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள் ளார்.

    இந்த நிலையில் சம்பத்தன்று ஷோரூமில் உள்ள தனியறையில் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்துள் ளார். பின்னர் அங்கு வந்த அவரது மகன் கதவை தட்டி உள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது ஆல்பர்ட்லூர்து சந்திரன் தூக்கில் தொங்கிய படி பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே மேலபுதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டாசு ஆலை டிரைவர். இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. ஆனால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமை யானார். வேலைக்கு செல் லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன விரக்தி யடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் ரத்தினம் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை குகன்பாறை இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்திருளாண்டி(வயது70), வளையல் வியாபாரி. வியாபாரம் சரிவர இல்லாத தால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது பேரன் அபினேஷ் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×