என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

    • இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே யுள்ள பெரிய தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகை (வயது 37). சமீபத் தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மல்லிகை தொடர்ந்து வயிற்று வலி யால் அவதிப்பட்டு வந்தார்.

    ஆசிட் குடித்தார்

    இதனால் வாழ்வில் விரக் தியடைந்த அவர் வீட்டில் இருந்த திராவகத்தை (ஆசிட்) குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித் கொடுத்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் கள்.

    தற்கொலை

    திருச்சுழி அருகே உள்ள புலியூரான் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிசித்திரை வேல் (46). இவர் தனது வீட்டருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். நஷ்டம் காரணமாக கடையை மூடிய அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.

    நரிக்குடி அருகேயுள்ள பனைக்குடியை சேர்ந்தவர் குமார் (43). வயிற்று வலி யால் அவதிப்பட்ட இவர் விருதுநகர் அரசு மருத்துவம னையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் தீராததால் மனவே தனை அடைந்த அவர் அதே கிராமத்தில் உள்ள கோழிக் கடை அருகே விஷம் குடித்து விட்டு மனைவிக்கு போன் செய்து தெரிவித்தார். உடனடியாக விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சண்முகய்யா (62). அதே பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தொழிற்சா லையில் வேலை பார்த்து வந்த அவர் ஓய்வுக்காக வெளியில் சென்றார். பின்னர் அங்கிருந்த மரத் தடியில் படுத்து உறங்கிய சண்முகய்யா சிறிது நேரத் தில் இறந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து, மகன் முத்துராம லிங்கம் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×