என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 2 பேர் தற்கொலை
- விருதுநகர் அருகே விஷம் குடித்து பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுண்டம்மாள் (வயது55). தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்பத்துபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (54). ஆவின் பாலகத்தில் வேலை பார்க்கிறார். டாஸ்மாக் கடை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மகன் வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






