என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை
- 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பனிக்கநேந்தலை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் கார்த்திகைசெல்வி (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தேர்வில் மதிப்பெண் குறைந்தததால் நன்றாக படிக்குமாறு குடும்பத்தினர் அடிக்கடி கூறியுள்ளனர். ஆனால் கார்த்திகைசெல்வி தனக்கு படிப்பு வரவில்லை என கூறினார்.
கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள ஜெகவீரன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் அக்ஷயா(21). கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. இதன் காரணமாக அவர் வீட்டில் இருந்து தொலை நிலைக் கல்வி மூலம் பயிற்று வந்தார். ஆனால் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அக்ஷயா வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷயா இறந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் ரோசல்பட்டி ரோட்டை சேர்ந்தவர் வேல் முருகன்(50), பெயிண்டர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்றார். இதனால் விரக்தியடைந்த வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






