என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தண்ணீர் டேங்க்கை சரி செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள்
- நடுவனந்தல் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் சாலைக்கு இன்று காலையில் வந்தனர்.
- நீர்த் தேக்கத் தொட்டி கட்டப் பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடு வனந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 40 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் டேங்க் பழுதாகி விட்டது. இதனால் பொது மக்களுக்கு விநியோகிக் கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்தது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த நடுவனந்தல் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் சாலைக்கு இன்று காலையில் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த ரோசனை இன்ஸ்பெக்டர் அன்னக் கொடி தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சாலை மறியல் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப் படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்கள் கூறுகையில், நீர்த் தேக்கத் தொட்டி கட்டப் பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இது பாழடைந்து, டேங்கின் மேல் தளம் உடைந்து பறவைகளின் எச்சம் மற்றும் குப்பைகள் விழுகின்றன. மேலும், இந்த டேங்கில் புழுக்களும் இருக்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் எங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனை குடிப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு விரைந்து தீர்வு கிடைக்கவில்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்