search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறு தானிய பயிர் ஊக்குவிக்க வாகன பிரசார ஊர்தி
    X

    சிறு தானிய பயிர் ஊக்குவிக்க வாகன பிரசார ஊர்தி

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • கோவை மாவட்டத்தில் அதிகமாக இறவை மற்றும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது.

    கோவை,

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டசத்து திட்டத்தின் கீழ், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், வாட்டாரங்களில் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவைக்கும் வகையில் பிரசார ஊர்தியினை கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, சோளம் கோவை மாவட்டத்தில் அதிகமாக இறவை மற்றும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. தற்போது தரமான சோள விதை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு கோவை மாவட்டத்தின் தேவை போக பிற மாவட்டத்திற்கும் விதைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 37 கிராமங்கள் கலைஞரின் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இதில் உதவி கலெக்டர் சவுமியா ஆனந்த், வேளாண்மை இணை இயக்குனர் முத்து லட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணவேனி, பெருமாள்சாமி வேளாண்மை உதவி இயக்குனர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×