என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஆய்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
நெல்லையில் நகர்ப்புற கோட்ட மின்வாரிய சிறப்பு ஆய்வு கூட்டம்
- பொதுமக்களிடம் இணையவழி மின்கட்டணம் செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கினார்.
- பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணியாளர்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
நெல்லை நகர்ப்புற கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிறப்பு ஆய்வு கூட்டம் கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
நெல்லை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி தலைமை தாங்கி பேசுகையில், வானிலை அறிக்கை சுட்டிக்காட்டியது போல் மோக்கா புயல் காரணமாக பெருமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கள் ஏற்பட்டால் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மேலும் தடையின்றி மின் வினியோகம் வழங்குவது குறித்தும், நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மின்வாரிய அலுவலர்களிடம், பொதுமக்களிடம் இணையவழி மின்கட்டணம் செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கினார்.
மின் நுகர்வோர்களிடம் மின்னகம் மின்னுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அந்தந்த பகுதி பிரிவு அலுவலக பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் பாதுகாப்பு வகுப்பு நடத்தி பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணியாளர்கள் பணிபுரிய உத்தரவிட்டார்
கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்ட் பொன்னுசாமி, சின்னசாமி, தங்கமுருகன், ராஜகோபல், சங்கர், முத்துகிருஷ்ணன் மற்றும் அனைத்து பிரிவு உதவி மின்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.






