search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்துவதை வரவேற்கிறேன்- மத்திய இணை மந்திரி எல்.முருகன்
    X

    எல்.முருகன் 

    தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்துவதை வரவேற்கிறேன்- மத்திய இணை மந்திரி எல்.முருகன்

    • கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

    சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் மரியாதை செய்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பூலித்தேவரை கெளரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.


    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், 2047- ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற இலக்கோடு நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றார். அந்த வகையில் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்த இருப்பதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது, அனைவருக்கும் வீடு திட்டம், குழாய் மூலம் குடிநீர் திட்டம் ஆகிய பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×