search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்கள்

    தூத்துக்குடியில் லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

    • தூத்துக்குடி முறப்பநாடு வசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்தை தாக்கி அவரிடமிருந்து செல்போன், செல்போன் பவர் பேங்க்,ஏ.டி. எம்.கார்டு, ரூ. 650-ஐ பறித்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முறப்பநாடு வசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    வழிப்பறி

    இவர் கடந்த 25-ந் தேதி மடத்தூர் எடைநிலையம் அருகில் சர்வீஸ் ரோட்டில் தனது லாரியை சரிபார்த்து ஓட்டிச்செல்வதற்கு தயாராக நின்றிருந்த போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்தை தாக்கி அவரிடமிருந்து செல்போன், செல்போன் பவர் பேங்க்,ஏ.டி. எம்.கார்டு, ரூ. 650-ஐ பறித்து சென்றனர்.

    வாலிபர்கள் கற்களால் தாக்கியதில் காயமடைந்த லாரி டிரைவர் சண்முகசுந்தரம் தூத்துக்குடி அரசு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    2 பேர் கைது

    இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலை யில் இன்று காலை மடத்தூர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்

    அதில் அவர்கள் தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் பண்டுகரைசேர்ந்த சதீஷ் (20), கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்பதும் இவர்கள் 25-ந்தேதி லாரி டிரைவர் சண்முகசுந்தரத்தை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வாலிபர்கள் வந்த இரு சக்கர வாகனத்துடன் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×