search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்- கலெக்டர் உத்தரவு
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்- கலெக்டர் உத்தரவு

    • திருவிடைமருதூா் தாசில்தார் சந்தனவேல் கும்பகோணம் முத்திரை கட்டண தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
    • பேராவூரணி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தரணிகா பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு கூறியிருப்பதாவது:-

    திருவிடைமருதூா் தாசில்தார் சந்தனவேல் கும்பகோணம் முத்திரைக் கட்டண தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் திருமால் பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரியும் ட சுசீலா திருவிடைமருதூா் தாசில்தா ராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.பேராவூரணி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தரணிகா பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றும் பாஸ்கரன் பேராவூரணி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

    திருவையாறு ஆதிதிரா விடா் நல தனி தாசில்தார் பூங்கொடி பாபநாசம் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் மதுசூதனன் கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றும் பொ்சியா பூதலூா் தாசில்தா ராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக (நிலம்) தனி தாசில்தார் நெடுஞ்செழியன் திருவையாறு ஆதி திராவிட தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×