search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலி
    X

    தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

    • ஜெய கணேஷ் சிலையின் அருகே சாய்ந்து நின்றபடி கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது திடீரென்று சிலையோரம் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.
    • படுகாயம் அடைந்த ஜெயகணேஷ் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய கணேஷ் (வயது46). கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் அண்ணா சிலை அருகில் நின்று கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது சிலையின் அருகே சாய்ந்து நின்றபடி கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது திடீரென்று சிலையோரம் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ஜெயகணேஷ் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×