search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை 106-வது பிறந்த நாள்:  நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு - மாவட்ட செயலாளர் அறிக்கை
    X

    தச்சை கணேசராஜா.

    நாளை 106-வது பிறந்த நாள்: நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு - மாவட்ட செயலாளர் அறிக்கை

    • கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை:

    அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106- வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு, கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, மற்றும் கிளை நிர்வாகிகள், தொ ண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல் நிர்வாகி கள், அவரவர்கள் பகுதிக்குட் பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழகங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவரின் உருவப்படத்திற்கு மலர் மாலையிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×