search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில்  பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    குடிபோதையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

    • வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • ஈஸ்வரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 52). நேற்று அவர் வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை தட்டி கேட்ட பழனியம்மாளை அந்த வாலிபர் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பழனியம்மாள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் பழனியம்மாளை தாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஈஸ்வரன் (வயது 37) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×